Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாள்: நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி - சுந்தரேஸ்வரர்!

09:37 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 7 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவில் சுவாமியும்
அம்மனும் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்தனர். 

Advertisement

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள் – சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!

இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 12-ம் தேதி சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதியும், வைகையில் அழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் திருவீதிவுலா வந்து
பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அந்த வகையில்,  இன்று 7 ஆம் நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

காலை 8 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் இருந்து சுவாமியும், அம்மனும் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் திருவீதிவுலா வந்தனர். இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் இருந்து சுவாமியும், அம்மனும் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் திருவீதிவுலா வந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags :
ChitraiFestivaldevoteesMaduraiMeenakshiammanSamidharshanSundareswararTemple
Advertisement
Next Article