Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை அண்ணா நகரில் கோர விபத்து - இருவர் உயிரிழப்பு!

02:48 PM Nov 13, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ  பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாடை இழந்ததில், சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்தவர்கள்,  துப்புரவு பணியாளர்,  சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் என 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விபத்தில் சிக்கிய 6 பேரையும் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் இருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான
நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.  இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்றதையடுத்து, ஒருவரைப் பிடித்த பொதுமக்கள்  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படியுங்கள்: "குர்பாஸின் கருணை அவர் போட்டியில் அடிக்கும் செஞ்சுரியை விட சிறப்பானது" 

இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதையில் காரை அதிவேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags :
AccidentAnnaNagarCCTVChennaideathDrunkAndDriveinvestigationNews7Tamilnews7TamilUpdatestragedy
Advertisement
Next Article