For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பு - தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:26 AM Oct 19, 2025 IST | Web Editor
காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பு   தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் 24-ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகக் கூடும் என ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் கேரள-கர்நாடக கடற்கரையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement