Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

07:04 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.  மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது கடலுக்கு சென்ற மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Next Article