மக்களவை தேர்தல் 2024 | 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு எப்படி?
காலை 9 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை 9 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காலை 9 மணி வரை மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 15% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் ம.பி.யில் 14 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
21 மாநிலங்களில் 9 மணி வரை எவ்வளவு வாக்குப்பதிவு நடந்தது?
1. மேற்கு வங்கம்- 15.9%
2. மத்தியப் பிரதேசம்- 14.12%
3. திரிபுரா- 13.62%
4. மேகாலயா- 12.96%
5. உத்தரப் பிரதேசம்- 12.22%
6. சத்தீஸ்கர்- 12.02%
8. அஸ்ஸாம்- 11.15%
9. ராஜஸ்தான்- 91.15%
10. காஷ்மீர் -10.43%
11. உத்தரகண்ட்- 10.41%
12. மிசோரம்- 9.36%
13. பிஹார்- 9.23%
14. அந்தமான்- 8.64%
15. தமிழ்நாடு- 8.21%
16. நாகலந்த்- 7.79%
17. மணிப்பூர் -7.63 %
18. பூது-7.49 %
19. சிக்கிம்-6.63 %
20. லட்சத்தீவு-5.59 %
21. அருணாச்சலப் பிரதேசம்- 4.95%