Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த சென்னை மருத்துவர்கள்!

10:11 AM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஷ் கே ராவ் தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் கூறியதாவது :

"பூடான் நாட்டைச் சேர்ந்த 7.5 கிலோ கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததில் இருந்தே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு 'பிலியரி அட்ரேசியா' என்ற நோய் ஏற்பட்டது. இந்த வகை நோயால் பாதிப்புக்குள்ளானோருக்கு பித்த நீர் குழாய் தடைபட்டிருக்கும். இதனால், கல்லீரலில் இருந்து பித்த நீர் வெளியேறாமல் தேங்கிவிடும். நாளடைவில் இது கல்லீரலை செயலிழக்க செய்யும்.

இதையும் படியுங்கள் : 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!

20,000 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த அரிய நோய் பாதிப்புக்குள்ளான அந்த குழந்தைக்கு முதலில் கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.  இங்கு மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்தக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, குழந்தையின் தாயிடம் இருந்து 300 கிராம் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு 8 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது.  திரள் நிதி மூலம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவ வல்லுநர்கள் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ரஜனிகாந்த், செல்வகுமார் மல்லீஸ்வரன் உள்ளிட்டோர் இந்த அறுவை சிகிச்சைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
BhutanChennai Glenacles Health City HospitalChildDoctorsIndiaLiver transplant
Advertisement
Next Article