For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“குறும்பா என் உலகே நீதான் டா”... ஆண் குழந்தைக்கு தந்தையானார் #SarfarazKhan!

09:38 AM Oct 22, 2024 IST | Web Editor
“குறும்பா என் உலகே நீதான் டா”    ஆண் குழந்தைக்கு தந்தையானார்  sarfarazkhan
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தனது தந்தையுடன் இருக்கும் சர்ஃப்ராஸ் கான் குழந்தையை கையில் வைத்துள்ளார். ‘இட்ஸ் எ பேபி பாய்’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சர்ஃப்ராஸ் கானுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவிடம் இந்திய அணியின் தொப்பியை வாங்கும் போது அவரது மனைவியும், தந்தையும் ஆனந்த கண்ணீர்விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, பெங்களூருவில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில், சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சர்ஃப்ராஸ் கான் 350 ரன்கள் குவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக இருந்த சர்ஃப்ராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதன்பின்னர் அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் இரட்டைசதம் விளாசினார். மேலும், விபத்தில் சிக்கிய தனது தம்பிக்காக இரட்டை சதம் அடித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Tags :
Advertisement