Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எல்ஐசி நிகர லாபம் 17.1% அதிகரிப்பு!

அரசுக்கு சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
05:05 PM Feb 09, 2025 IST | Web Editor
அரசுக்கு சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
Advertisement

கடந்த ஆண்டு டிச.31 அன்றுடன் முடிவடைந்த 9 மாத கால
செயல்பாட்டு சிறப்பம்சங்கள் குறித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

Advertisement

எல்ஐசியின் தலைவர் சித்தார்த் மொஹந்தி இதுகுறித்து கூறுகையில்,

“மாறி வரும் வணிக சூழலுக்கேற்ப மக்களின் தேவைகளுக்காக எங்கள் பாலிசி திட்டங்களை வடிவமைத்து வருகிறோம். டிசம்பர் 31, 2024 அன்றுடன் முடிவடைந்த காலத்தில் தனி நபர் வணிகத்தில் இலாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் சென்ற ஆண்டு 14.04 சதவிகித்திலிருந்து 27.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புது வணிக இலாப வரம்பு 17.1 % ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான காப்பீட்டு பாதுகாப்பை அதிகரிப்பதில் எல்ஐசி தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் மகளிர் காப்பீட்டு விற்பனையின் மூலம் தற்சார்பு பெரும் எல்ஐசியின் பீமா சகி திட்டத்தை நமது பிரதமர் கடந்த 09.12.2024 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் பதிவு செய்து, 70,000 மகளிர் பீமா சகிக்களாக பணியாற்றி வருகின்றனர்.

எங்கள் டிஜிட்டல் முயற்சிகளின் பலன்கள் வரும் மாதங்களில் தெரிய வரும். மாறி வரும் வணிக சூழ்நிலைக்கேற்ப எங்கள் செயல்பாடுகளை தகவமைத்து கொள்ள தொடர்ந்து ஆதரவை தரும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
increasesLICNet ProfitPremium Income
Advertisement
Next Article