For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குறைகளை நிவர்த்தி செய்து அயலான் 2ம் பாகத்தை சிறப்பாக வெளியிடுவோம் - நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு!

07:25 PM Jan 16, 2024 IST | Web Editor
குறைகளை நிவர்த்தி செய்து அயலான் 2ம் பாகத்தை சிறப்பாக வெளியிடுவோம்   நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
Advertisement

அயலான் திரைப்படத்தின் விமர்சனங்களை ஏற்று அயலான் 2 படத்தில் இன்னும் சிறப்பாக செய்வோம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின்  ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களுமே,  இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் அவற்றின் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது.

ஒரு தரப்பினர் இந்த இரு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மக்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ முதல் நாளில் ரூ. 3.2 கோடி வசூலித்தது. 2-வது நாளில் ரூ. 4.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. 

இப்படம் உலகளவில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களையே படம் பெற்றிருந்தாலும் அயலான் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமா திரையரங்கில் படத்தின் நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் புதுவிதமான திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொடுக்க வேண்டும் என ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும், எதிர்பார்த்தது போல் படத்தை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் உள்ள விமர்சனங்களை ஏற்று அயலான் 2 படத்தில் இன்னும் சிறப்பாக செய்வோம் எனவும் இந்த படத்தின் கைதட்டல்களை ரவிக்குமாரின் தாயாருக்கு சமர்ப்பிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement