For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு!

02:04 PM Jun 12, 2024 IST | Web Editor
ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்  சபாநாயகர் அப்பாவு
Advertisement

ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி கூடவுள்ள நிலையில்,  துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டதில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளில் ஜூன் 20-ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஜூன் 21 முதல் 29-ம் தேதி வரை துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 28-ம் தேதி மாலை மற்றும் 29-ம் தேதி காலை காவல்துறை,  தீயணைப்பு ஆகிய துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement