For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது!

09:42 AM Feb 26, 2024 IST | Web Editor
அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவு  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு தொடங்கியது
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

Advertisement

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படு வருகிறது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை  6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி வருகை – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் எஸ்சிஇஆர்டி இயக்குநர் ஆகிய இருவரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

  • "கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://txam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.  வினாத்தாள்களை பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கற்றல் விளைவு,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.
  • ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும்.  ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த வினா தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும்.
  • இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,  சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
  • விடைகளை மாணவர்கள் தாங்களாகவே எழுதுவதை வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.
  • தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில்,  இந்த வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள்,  வினா அமைப்பு,  தேர்வுகளில் தாள்களில் வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு ,  திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome/ Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்த தேர்வு அரசுப் பள்ளிகளில் இன்று தொடங்கியது

Tags :
Advertisement