For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
03:28 PM Jun 10, 2025 IST | Web Editor
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்
Advertisement

கடந்த சில நாட்களாகவே பாமகவில் உள்கட்சி பூசல் தொடர்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே நிலவும் பனிப்போரால் நிர்வாகிகள் குழம்பி போய் உள்ளனர். ராமதாஸ் நீக்கம் செய்து அறிவிக்கும் நிர்வாகிகள், மீண்டும் பொறுப்பில் இருப்பதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபியை மாநிலத் தலைவராக பணியமர்த்தி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளராக சுரேஷ், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக ஸ்ரீதர், மாநிலத் தேர்தல் பணி குழு செயலாளராக பூபால் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் சங்க தலைவராக மூர்த்தி ஆகியோரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement