For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீ விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நிவாரணம் - என்பிடிசி நிறுவனம் உறுதி!

10:03 PM Jun 13, 2024 IST | Web Editor
குவைத் தீ விபத்து   உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ  8 லட்சம் நிவாரணம்   என்பிடிசி நிறுவனம் உறுதி
Advertisement

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்சம் ரூபாய் வழங்குவதாக என்பிடிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  நேற்று அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.

இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு அழைப்பு! GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம்!

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் நாளை காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்பிடிசி நிறுவனம் தலா 8 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் என்பிடிசி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Tags :
Advertisement