Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை கோயம்பேடு சந்தை செயல்படாது!

07:36 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.13) கோயம்பேடு சந்தை செயல்படாது என கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

நடப்பாண்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இது ஒருபுறம் இருக்க, சொந்த ஊா்களுக்குச் செல்லவும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனா். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.13) அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.13) கோயம்பேடு சந்தை செயல்படாது என்று கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Tags :
Chennaikoyambedukoyambedu Market LeaveKoyampedu Marketnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article