Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபாஸுக்கு வில்லனாகும் கொரிய நடிகர்? வெளியான புதிய தகவல்!

04:40 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இப்படம் காவல்துறையை சார்ந்த கதையாக உருவாகிறது. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சந்தீப் -பிரபாஸ் இணைகிற படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் (ma dong seok) நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரியன் ஆக்சன் படங்களில் நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் மா டாங். இவர் நடிப்பில் வெளியான, 'தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில் (the gangster the cop the devil)' திரைப்படம் உலகளவில் கவனம் பெற்றது.

தற்போது, பான் ஆசியன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இப்படம் இந்திய மொழிகளுடன் ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
Ma Dong SeokPrabhasSandeep Reddy VangaVillain
Advertisement
Next Article