For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொடநாடு விவகாரம் - வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

10:59 AM Jan 19, 2024 IST | Web Editor
கொடநாடு விவகாரம்   வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி இபிஎஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், நேரில் ஆஜராக அவருக்கு விலக்கு அளித்து, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞரை நியமித்தது.

இதையும் படியுங்கள் : 3வது டி20 போட்டி – ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை!

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறக் கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி இபிஎஸ் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி, பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன்பின்னர் ஆஜராக தயாராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 30, 31-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று (ஜன.18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி  தரப்பில், இரு நீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்பரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
Advertisement