For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் குத்திய மர்ம நபர்: 10 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!

03:08 PM May 07, 2024 IST | Web Editor
மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் குத்திய மர்ம நபர்   10 பேர் உயிரிழப்பு    பலர் படுகாயம்
Advertisement

தென்மேற்கு சீனாவின் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

சீனாவின் யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் உள்ளது ஜென்ஜியாங் கவுண்டி மக்கள் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று 11 மணி அளவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் சராமாரியாக கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,  பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளதாகவும்,  அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

சீனாவில் இது போன்ற கத்திக்குத்து சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனானில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கத்தியால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement