Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் கிளாசன்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 33 வயதான தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிக் கிளாசன் அறிவித்துள்ளார். 
03:46 PM Jun 02, 2025 IST | Web Editor
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 33 வயதான தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிக் கிளாசன் அறிவித்துள்ளார். 
Advertisement

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிக் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2018ஆம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமானார். 

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது கடினமானது என்றாலும், தன்னையும், தனது குடும்பத்தின் நலன் கருதியுமே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். தனது நாட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், உலக அரங்கில் தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் மிகுந்த பெருமைப்படுவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கிளாசன் தெரிவித்துள்ளார்.

33 வயதான கிளாசன் தென்னாப்பிரிக்காவுக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.69 சராசரியுடன் ரன் குவித்தார். அவர் 58 டி20 சர்வதேச போட்டிகளில் புரோட்டியாஸ் அணிக்காக விளையாடி 1,000 ரன்கள் எடுத்தார். கிளாசென் தனது சர்வதேச வாழ்க்கையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

லீக் போட்டிகளில் முக்கிய வீரராக கிளாசன் பங்காற்றி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை ரூ.23 கோடிக்கு தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Heinrich Klaaseninternational cricketRetirementSouth Africa
Advertisement
Next Article