Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கத்தால் ஆன பைக் - மிரள வைக்கும் பீகார் மனிதர்!

02:57 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

பீகாரில் கோல்ட்மேன் என்று அழைக்கப்படும் நபர் தங்கத்தால் ஆன உதிரி பாகங்களால் செய்யப்பட்ட பைக்கை ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் பிரேம் சிங். இவர் சிறுவயதிலேயே தங்க நகை  மீது விருப்பம் கொண்டதாகவும், அதனால் சிறுவயதிலேயே தங்க நகைகளை அணிந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு வளர வளர தங்கத்தின் மீதான ஆசையும் வளர்ந்து கொண்டே வருவதாக அவர் தெரிவித்ததாக தெரிகிறது.  இதனால் தற்போது அவர் 5.2 கிலோ தங்கத்தை அணிகலன்களாக அணிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கழுத்தில் மட்டுமே அவர் 4 கிலோ அளவுக்கு தங்க நகை அணிந்து இருப்பதாகவும் அவர் அணிந்திருக்கும் தங்க நகையின் மதிப்பு மட்டுமே சுமார் ஒன்றரை கோடி என்றும் கூறப்படுகிறது. இதனால் இவரை கோல்ட்மேன் என்று கூறுகின்றனர்.  இந்த நிலையில் அவர் தனது பைக்கையும் 200 கிராம் வரை தங்கத்தால் ஆன உதிரி பாகங்களால் அலங்கரித்துள்ளார்.

இந்த தங்க உதிரி பாகங்கள் கொண்ட பைக்கை அவர் பெங்களூரில் தயாரித்ததாகவும், மேலும் இதை உருவாக்க சுமார் 7 முதல் 8 மாதங்கள் வரை ஆனதாகவோம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தங்க உதிரி பாகங்கள் கொண்ட பைக்கை உருவாக்க சுமார் ரூ.12 லட்சம் வரை செலவானதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த பைக்கை அவர் சாலையில் ஓட்டிச்செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.

Tags :
BiharGoldmanPatna
Advertisement
Next Article