வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை - 1,000 அடி உயரத்திற்கு வெளியேறிய தீக்குழம்பு!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம். இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது.
அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், வெள்ளிக்கிழமை காலை, கிலாவியா கால்டெராவில் உள்ள குழி பள்ளத்தில் இருந்து எரிமலைக்குழம்பு சுமார் 1,000 அடி உயரத்திற்கு வெளியேறியது. இந்த வெடிப்பு, ஹவாய் தீவு தேசிய பூங்காவில் சாம்பல் பரவியது. இது கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 25வது முறையாக வெடித்தது" என்பது குறிப்பிடத்தக்கது.