For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

KIIT பல்கலை. மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம் - உண்மையா?

ஒடிசா மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
09:54 AM Feb 24, 2025 IST | Web Editor
kiit பல்கலை  மாணவியின் மரணத்தில் தொடர்புடைய ஆத்விக்கின் தந்தை என வைரலாகும் படம்   உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘The Quint

Advertisement

ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி ( KIIT) பல்கலைக்கழகத்தில் ஒரு  மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறையினரால்  21 வயதான அத்விக் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது தந்தை என்று அடையாளம் காணும் மனோஜ் கே ஸ்ரீவஸ்தவா என்ற நபரின் படம் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது

20 வயது மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது, இது கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே போராட்டங்களைத் தூண்டியது.

பாதிக்கப்பட்ட பெண் தனது சக மாணவரால் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்தபோது நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்டவர் லக்னோவைச் சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்த நிலையில் ஆத்விக்கின் தந்தை என ஒரு படம் வைரலாகி வருகிறது. வைரல் படத்தில் காணப்படும் நபர் குற்றம் சாட்டப்பட்டவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதால் இந்தக் கூற்று தவறானது என்பது முடிவாகிறது. 

உண்மையை எப்படி கண்டுபிடித்தோம்?:

ஃபேஸ்புக்கில் வைரலான படத்தில் காணப்படும் பயனர் பெயரைத் தேடினோம், மனோஜ் கே ஸ்ரீவஸ்தவாவின் அதே சுயவிவரத்தைக் கண்டறிந்தோம். அந்தக் கணக்கினை சரிபார்த்தபோது அவர் பாரதிய கேசரிய வாஹினியின் தேசியத் தலைவராக அடையாளம் காட்டியது.

வைரல் கூற்றுக்களை மறுத்த ஸ்ரீவஸ்தவா :

இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தைப் ஆய்வு செய்தபோது ​​பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பை நாங்கள் கண்டோம்.  இந்த காணொலியில், அவர் வழக்கைப் பற்றிப் பேசுவதைக் கேட்க முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகன் என்ற வைரலான கூற்றை மறுத்தார். தனது மகன் யாரும் ஒடிசாவில் உள்ள எந்த பொறியியல் பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை என்றும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஸ்ரீவஸ்தவா மேலும் தெளிவுபடுத்தினார்.

ஒடிசாவில்  மாணவியின் மரணத்தில் சந்தேக நபராக பிடிபட்ட அத்விக் ஸ்ரீவஸ்தவாவை ஊடகங்கள் எனது மகன் என்று தவறாக விளம்பரப்படுத்துவதாகவும் இது முற்றிலும் தவறு என்றும் அவர் அந்த காணொலியில் விளக்கினார்.

முடிவு:

வைரல் படத்தில் காணப்படும் நபர், ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவின் தந்தை என்று தவறாக அடையாளம் காணப்பட்டிருப்பது தெளிவாகிறது. WebQoof குழுவும் அவரது கருத்துகளுக்காக அவரைத் தொடர்பு கொண்டுள்ளது. ஸ்ரீவஸ்தவாவின் பேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது


Note : This story was originally published by ‘The quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement