Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

12:57 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பான யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதனுடன், மின் கம்பிகளையும் சிக்னல்களையும் சரி செய்யும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகளும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் விபத்து நிகழ்ந்தபோது பணியில் இருந்த அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags :
kavaraipettainews7 tamilPoliceSouther RailwayTiruvallurTraintrain accidentTrain cancel
Advertisement
Next Article