Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஷ்மீர் : மேக வெடிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
07:22 AM Aug 19, 2025 IST | Web Editor
காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கிஷ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் கடந்த 14ம் தேதி திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இடைவிடாது கனமழை பெய்ததால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement

தொடர் கனமழை காரணமாக கிஷ்த்வார் கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்வதற்ககாக அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்ட நிலையில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வெள்ளத்தில் சிக்கி 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வெள்ளத்தில் சிக்கி மாயமான 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இதனால் காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சிசோட்டி கிராமம் முதல் வெள்ளம் பாதித்த பகுதி வரை மாயமான 500க்கும் மேற் பட்டோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

Tags :
CloudburstfloodsHeavyRainJammuKashmirKashmirlandslide
Advertisement
Next Article