For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கார்த்திகை தீபத் திருவிழா : களையிழந்த சென்னை காசிமேடு மீன் சந்தை!

01:55 PM Nov 26, 2023 IST | Web Editor
கார்த்திகை தீபத் திருவிழா   களையிழந்த சென்னை காசிமேடு மீன் சந்தை
Advertisement

கார்த்திகை தீபத்தையொட்டி, சென்னை காசிமேடு மீன் சந்தை களையிழந்து காணப்பட்டது.

Advertisement

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இதையும் படியுங்கள்:குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளேன் – மன்சூர் அலிகான்!

இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.  இதனையடுத்து, இன்று மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவள்ளது.

இந்த நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி,சென்னை காசிமேடு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் விற்பனைக் கூடத்தில், பொதுமக்களின் வழக்கமான கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags :
Advertisement