For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
03:01 PM Jun 06, 2025 IST | Web Editor
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு
Advertisement

பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறியதையடுத்து. அதை கொண்டாடுவதற்கு நேற்று(ஜூன்.04) சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும்  47  பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இது குறித்து நீதி விசாரணை நடத்தபடும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதையடுத்து இன்று அது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டம் கூட அனுமதி கொடுத்தது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பபட்டது. இதனிடையே அம்மாநில அரசு சார்பிலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழு பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், மத்திய துணை ஆணையர் சேகர், ஒரு ஏசிபி & கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க‌ உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் வழக்கில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் ரகு ராம் பட் மற்றும் சில நிர்வாகிகள் இன்று (ஜூன் 6, 2025) கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Tags :
Advertisement