For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகள் பயன்படுத்த, கர்நாடக அரசின் சுகாதார துறை தடை விதித்துள்ளது.
08:41 AM Jun 27, 2025 IST | Web Editor
பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகள் பயன்படுத்த, கர்நாடக அரசின் சுகாதார துறை தடை விதித்துள்ளது.
பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து  மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை
Advertisement

கர்நாடக அரசின் சுகாதார துறை கடந்த மே மாதம், உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை பெற்று ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தற்போது வெளியாகி உள்ள ஆய்வு முடிவின்படி ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Advertisement

மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"மாத்திரை, மருந்துகளை மொத்த விற்பனையாளர்கள், மருத்துவமனைகள், கிளினிக்கில் சேமித்து வைத்து விற்பனை செய்யவோ, அதை பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. “ஏதேனும் இருப்பு இருந்தால் உள்ளூர் மருத்துவ கண்காணிப்பாளர், உதவி மருத்துவ கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement