For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Karnataka முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

08:02 PM Sep 30, 2024 IST | Web Editor
 karnataka முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
Advertisement

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisement

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ரூ. 56 கோடி மதிப்பிலான 14 இடங்களை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆக. 17-ம் தேதி அனுமதி வழங்கினார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, முதலமைச்சர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மற்றும் தேவராஜூ ஆகியோர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை முன்வைத்து சித்தராமையா மீது அமலாக்கத்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

Tags :
Advertisement