For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு!

11:53 AM Mar 05, 2024 IST | Web Editor
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு
Advertisement

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி இன்று விருப்பமனு தாக்கல் செய்தார். 

Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் திமுகவின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நேற்று (மார்ச் 4) மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுக்களை அளித்தனர்.  அதேபோல், வடசென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தூக்குக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.  ஏற்கனவே தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டியிட வலியுறுத்தி 80க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். 

Tags :
Advertisement