காமராஜர் நினைவு நாள் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10:11 AM Oct 02, 2025 IST
|
Web Editor
Advertisement
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழகத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து ,
இந்திய நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த மாமனிதர்,
Advertisement
எண்ணற்ற திட்டங்கள் மூலம்
ஏழைகளின் வாழ்விற்கு ஏற்றம் தந்து ,
வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற
எளிமையின் அடையாளம்;
தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம்
"பெருந்தலைவர்" காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று,
இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் கர்மவீரர் அவர்கள் ஆற்றிய பெரும் சேவைகளை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article