Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒருவர் கைது!

03:04 PM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விவகாரத்தில் முத்து என்ற மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,  புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் (ஜூன் 19) உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 20) மேலும் 19 பேர் இறந்தனர்.

இதனிடையே,  சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் இன்று (ஜூன் 21) உயிரிழந்தனர்.  இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்தது.  மேலும், 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில்,  49 பேர் உயிரிழப்புக்கு காரணமான விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு காரணமான சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு முன்பாக மெத்தனால் கலந்த சாராய பாக்கெட்டுகளை முதலில் விற்பனைக்கு தொடங்கியது மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த சாராய வியாபாரி முத்து என்பது விசாரணையில் தெரிய வர அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags :
ArrestHooch LiquorKallakurichiSpurious liquor
Advertisement
Next Article