For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரட்டை சதம் விளாசினார் ஜெய்ஷ்வால் - முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியா 396 ரன்கள் குவிப்பு

11:20 AM Feb 03, 2024 IST | Web Editor
இரட்டை சதம் விளாசினார் ஜெய்ஷ்வால்   முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியா 396 ரன்கள் குவிப்பு
Advertisement

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியா 396 ரன்கள் குவித்துள்ளது.  இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வால் இரட்டை சதம் விளாசினார்.

Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம்  ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சேர்த்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

4-ஆவது பேட்டராக வந்த ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார்.  நிதானமாக ஆடி விக்கெட் சரிவைத் தடுத்த இந்தக் கூட்டணி ரன்களை எண்ணிக்கையை உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை இந்திய அணி குவித்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் யெசஸ்வி ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி 290 பந்துகளுக்கு 209 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 396ரன்களை குவித்துள்ளது.

Tags :
Advertisement