Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களமிறங்கிய IT அதிகாரிகள் - தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை!!

09:05 AM Nov 03, 2023 IST | Jeni
Advertisement

சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னையில் காசா க்ராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகர் (மேற்கு) பகுதியில், சிண்டிகேட் பேங்க் காலனி 10-வது தெருவில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் ரெட்டி என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல், புரசைவாக்கம் பிரக்லின் ரோட்டில் உள்ள டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு புதிதாக கட்டி வரும் கட்டிட வேலைகளுக்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை அமித் விநோயகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

மேலும், அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடத்திலும், வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தின் அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பைனான்சியர் ஒருவரின் வீட்டிலும், தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், திருவான்மியூர் பகுதியில் காசா கிரண்ட் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

கரூரில் தனியார் நிதி நிறுவனம் உட்பட 4 இடத்திலும், கோவையில் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags :
#IncomeTaxChennaicompanyITRaidPrivateRaid
Advertisement
Next Article