Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு - சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
08:08 PM Aug 11, 2025 IST | Web Editor
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Advertisement

 

Advertisement

திருநெல்வேலியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை ஆகியோரை ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே கவின் சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில், கவினின் நண்பர் சுர்ஜித், தனது சகோதரிக்கு கவின் அனுப்பிய குறுஞ்செய்திகளால் ஆத்திரமடைந்து, தனது தந்தையின் துணையோடு கவினை கொலை செய்தது தெரியவந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் ஆழமான விசாரணை நடத்துவதற்காக, இருவரையும் காவலில் எடுக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை ஆகஸ்ட் 13 வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நாட்களில், கொலையின் பின்னணி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வேறு ஏதேனும் நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
CBCIDcrimenewsitemployeekavinNellaiSurjithTamilNadu
Advertisement
Next Article