For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ISRO: எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு!

10:42 AM Aug 14, 2024 IST | Web Editor
 isro  எஸ்எஸ்எல்வி டி 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு
Advertisement

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் ஒரு ஆண்டுகாலமாகும்.

சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளின் ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்த ராக்கெட் சுதந்திர தினத்தில் (ஆக.15) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக, அந்தத் திட்டம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement