For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.
09:22 PM Mar 18, 2025 IST | Web Editor
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. இப்போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 48,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் இந்த போரில் இடம்பெயர்ந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

Advertisement

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.

இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், மீண்டும் போர் தொடங்கும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.

இந்த தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags :
Advertisement