Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இஸ்ரேல் தாக்குதல் - 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு... #Lebanon-ல் 3 பத்திரிகையாளர்களும் உயிரிழப்பு!

09:31 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

காஸா மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர்.

Advertisement

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் ராணுவம், காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைகளின் புகையின் விளைவாக பல குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர்.

மேலும், லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். அந்த நேரத்தில், விடுதியில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என காஸா செய்தி நிறுவனங்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தற்போது வரை வரவில்லை.

இதன் மூலம் லெபனானில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் மட்டும் 128 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாதி சந்தித்து பேசினார்.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17,000 குழந்தைகள், 11,400 பெண்கள் உள்பட 42,800 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் சுமார் 1000 சுகாதாரப் பணியாளர்களும், ஐ.நா. அவையைச் சேர்ந்த 220 பேரும் பலியாகியுள்ளனர்.

Tags :
IsraelJournalistsLebanonPalestinians
Advertisement
Next Article