For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,436 ஆக அதிகரிப்பு!

11:54 AM Jan 02, 2024 IST | Web Editor
இஸ்ரேல்   ஹமாஸ் போர்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 436 ஆக அதிகரிப்பு
Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்றோடு 87வது நாளாக நீடித்து வரும் நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,436 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள் : காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்..!

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

 காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,000 கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர்.இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,436 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
Advertisement