Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களே குடை ரெடியா?.. காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:31 AM Mar 01, 2025 IST | Web Editor
Advertisement

காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 3ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி,தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பரவலாக பெய்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

தென்தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: 

நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
ராமநாதபுரம்
புதுக்கோட்டை

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் (பகுதிகள்): 

மயிலாடுதுறை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தூத்துக்குடி
கடலூர்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
காரைக்கால் மற்றும் புதுச்சேரி

Tags :
IMDnews7 tamilNews7 Tamil UpdatesRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article