For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் இவரா? வெளியான புதிய தகவல்!

11:24 AM Oct 13, 2024 IST | Web Editor
இந்த வாரம்  biggboss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் இவரா  வெளியான புதிய தகவல்
Advertisement

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் போட்டியாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பினார் விஜய் சேதுபதி. கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டையே இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் முதல்முறையாக வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. பின்னர் மீண்டும் அவர் கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இருந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் நடந்த எவிக்ஷனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டிலிருந்து வெளியேறிதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது இன்றிரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியிலேயே தெரியவரும்.

Tags :
Advertisement