Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?
பஞ்சாபில் ஒரு வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருடுவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
01:01 PM Feb 14, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by 'Vishvas News’
Advertisement
சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் ஒரு காணொளில் 3 ஆண்கள் இருப்பது தெரிகிறது. அதில் ஒருவர் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து தேடுவதையும், மற்றொருவர் வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருப்பதையும் காணலாம். பின்னர் 3வது நபரும் அங்கு வருகிறார். இந்த காணொளியை சிலர் பகிர்ந்து இது பஞ்சாபில் எடுக்கப்பட்டது என பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறாக வழிநடத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், இந்த வைரல் காணொளி தெலங்கானாவின் தந்தூர் மண்டலத்தின் கோனாபூர் கிராமத்தைச் சேர்ந்தது. இது இப்போது பஞ்சாபிலிருந்து வந்ததாக தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.
வைரல் பதிவு:
பேஸ்புக் பயனர் 'ரவி குமார்' ஜனவரி 26, 2025 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்து, "அவர்கள் பஞ்சாபை உ.பி. பீகாராக மாற்றியுள்ளனர், இரவில் வீடுகளில் திருடுகிறார்கள் #reelsfbシ #viralreels #viralreelschallenge #trendingreels #reelschallenge #reelsviral #facebookreels #shortsviral #shortsvideos #shorts #shorts" என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளனர்.
வைரல் பதிவின் காப்பக இணைப்பை இங்கே காண்க.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான காணொளியை சரிபார்க்க, இன்விட் கருவியின் உதவியுடன் காணொளியின் பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து, கூகுள் லென்ஸின் உதவியுடன் தேடப்பட்டது. YOYO TV சேனலின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் காணொளி தொடர்பான அறிக்கை கிடைத்தது. ஜனவரி 8, 2025 அன்று பதிவேற்றப்பட்ட காணொளியுடன் கொடுக்கப்பட்ட தகவலின்படி, இந்த சம்பவம் தெலங்கானாவின் தந்தூரிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
தேடலின் போது, eenadu.net என்ற இணையதளத்தில் காணொளி தொடர்பான ஒரு அறிக்கையை கிடைத்தது. இந்த அறிக்கை ஜனவரி 9, 2025 அன்று வெளியிடப்பட்டது. அந்த தகவலின்படி, இந்த சம்பவம் தெலங்கானாவைச் சேர்ந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு மக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் 99TV யின் முகநூல் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலான காணொளி தொடர்பான செய்திகள் கிடைத்தன. ஜனவரி 8, 2025 அன்று பகிரப்பட்ட காணொளியில், "இந்த மாதம் 1ம் தேதி, தந்தூர் மண்டலத்தின் கோனாபூர் கிராமத்தில் 4 வீடுகளுக்குள் திருடர்கள் நுழைந்தனர். திருடர்களின் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருடர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பால்கி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்ததாகக் கூறும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் இந்த வைரல் காணொளி பலரால் பகிரப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஹர்ஷாவைத் தொடர்பு கொண்டபோது, வைரலாகும் காணொளி தெலங்கானாவைச் சேர்ந்தது என்று அவர் கூறினார்.
இறுதியாக, தவறான கூற்றுடன் வீடியோவைப் பகிர்ந்த பயனரின் கணக்கை ஸ்கேன் செய்தபோது, அந்தப் பயனரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்வது தெரியவந்தது. அந்தப் பயனர் தனது சுயவிவரத்தில் தன்னை சங்ரூரில் வசிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிவு:
வீட்டிற்குள் நுழையும் திருடர்களின் வைரல் காணொளி பஞ்சாபைச் சேர்ந்தது அல்ல, உண்மையில், இந்த சம்பவம் 2025 ஜனவரியில் தெலங்கானாவின் தந்தூர் மண்டலத்தின் கோனாபூர் கிராமத்தில் நடந்தது. இது இப்போது பஞ்சாபைச் சேர்ந்ததாகக் கூறி தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. இந்த காணொளிக்கு பஞ்சாபுடன் எந்த தொடர்பும் இல்லை.