உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒரு இந்துப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரவும் காணொலி உண்மையா?
This News Fact Checked by ‘AajTak’
இரண்டு வீடியோக்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. முதல் வீடியோவில், ஒரு ஆண் ஒரு பெண்ணை வழி மறித்துக்கொண்டே ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான். இரண்டாவது வீடியோவில், அதே நபர் ஒரு போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி போலீஸ்காரர்களின் உதவியுடன் காவல் நிலையத்தை நோக்கி நொண்டி நடப்பது போல் காட்டப்படுகிறது. இது உ.பி.யின் முசாபர்நகரில் நடந்த ஒரு சம்பவம் என்றும், அங்கு ஒரு முஸ்லிம் நபர் ஒரு பெண்ணை பாலியல் தொல்லை செய்ததாகவும், அதன் பிறகு போலீசார் அவரைக் கைது செய்து அவருக்கு ஒரு பாடம் கற்பித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
'செயல்' மற்றும் 'எதிர்வினை' என்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்ட 2 வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. முதல் வீடியோவில், ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் ஏதோ சொல்லிக்கொண்டே அப்பெண்ணை தொடர்ந்து தடுக்கிறார். இறுதியில், அந்தப் பெண் அங்கிருந்து ஓடிவிடுகிறார். அந்த நபர் அவளைத் துரத்தத் தொடங்குகிறார். இரண்டாவது வீடியோவில், அதே நபர் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி, போலீஸ்காரர்களின் உதவியுடன் காவல் நிலையத்தை நோக்கித் தள்ளாடி நடந்து வருகிறார்.
இந்த காணொளியைப் பகிர்ந்தவர்கள், “இது உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்த ஒரு சம்பவம், அங்கு ஒரு முஸ்லிம் நபர் ஒரு பெண்ணை பாலியல் தொல்லை செய்தார். பிறகு போலீசார் அவரைக் கைது செய்து அவருக்கு ஒரு பாடம் கற்பித்தனர்” என பதிவிட்டுள்ளனர்.
அத்தகைய ஒரு படத்தொகுப்பை, "உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த மக்கள், ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பெண்ணை கிண்டல் செய்யும் போது, ஒரு பெண்ணை கிண்டல் செய்த பிறகு. நீங்கள் அவர்களை கிண்டல் செய்தால், நாங்கள் உங்களை விடமாட்டோம். அதிரடி எதிர்வினை" என பதிவிட்டுள்ளனர். வைரல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
இந்த வழக்கில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை என உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் இருவரும் இந்துக்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.