For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா?

மகா கும்பமேளாவில், தேசியவாதிகளும் சனாதனி மக்களும் ராணுவ வீரர்கள் மீது செருப்புகளை வீசினர் என ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
01:57 PM Feb 15, 2025 IST | Web Editor
‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘AajTak

Advertisement

ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கூட்டம் காவல்துறையினர் மற்றும் சில பாதுகாப்புப் பணியாளர்கள் மீது செருப்புகளை வீசும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இந்த காணொளி பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதில், 'கும்பமேளாவில் மக்கள் ராணுவத்தை செருப்புகளால் அடித்தார்கள்' என்று பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவில் காணப்படும் மைதானம் மக்களால் நிரம்பியுள்ளது. சில போலீசாரும் வேறு சில பாதுகாப்புப் பணியாளர்களும் தடுப்புகளுக்குப் பின்னால் காணப்படுகிறார்கள். தடுப்புகளின் மறுபுறத்தில் நிறைய தள்ளுமுள்ளு நடக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கூட்டத்தில் இருந்தவர்கள் செருப்புகளை வீசத் தொடங்குகிறார்கள்.

ஒரு ட்விட்டர் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "கும்பமேளாவில், தேசியவாதிகளும் சனாதனி மக்களும் ராணுவ வீரர்கள் மீது செருப்புகளை வீசினர்! அவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால், இன்று அனைத்து அரசு ஊடக சேனல்களிலும் இதுவே செய்தியாக இருந்திருக்கும். ஆனால் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கப்படலாம்" என்று பதிவிட்டிருந்தார்.

Tags :
Advertisement