‘யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சங்கராச்சாரியார் மீது தடியடி’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘AajTak’
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் ஜோதிர்மதத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா யோகி அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, யோகி அரசாங்கத்தின் உத்தரபிரதேச காவல்துறை சங்கராச்சாரியாரை மோசமாக தாக்கியதா? சில பயனர்கள் சமூக ஊடகங்களில் அவரது வீடியோவைப் பகிர்ந்து கொண்டு இந்தக் கூற்றை முன்வைக்கின்றனர் .
வீடியோவில், சங்கராச்சாரியார் ஊடகங்களிடம், "நமது கடவுள் சாலையில் நிற்கிறார்."என பேசுவதை காணலாம். இதன் பிறகு, போலீசார் அவரை விரட்டியடித்து, தடிகளால் அடித்தனர்.
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, #அமித்ஷா ஜி, சங்கராச்சாரியார் ஜி மீது தடியடி நடத்தப்பட்டது மிகவும் வெட்கக்கேடானது, இதற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது! உடலில் ஏற்படும் ஒவ்வொரு தடியடியின் எதிரொலியும் வெகுதூரம் செல்லும், தயவுசெய்து இதை நிறுத்துங்கள்! காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! #யோகி ஜி, ராஜினாமா செய்யுங்கள், அவர்களால் UP-ஐ கையாள முடியவில்லையா? @AmitShah” என்று பதிவிட்டுள்ளனர்.. அத்தகைய ஒரு பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
சங்கராச்சாரியார் மீது தடியடி நடத்தப்பட்ட வீடியோ தற்போது அல்ல, 2015 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டது என உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில், விநாயகர் சிலை கரைப்பு தொடர்பான சர்ச்சையின் மத்தியில் வாரணாசியில் உ.பி. காவல்துறை இந்த தடியடியை நடத்தியது.
உண்மை சரிபார்ப்பு:
மகா கும்பமேளாவின் போது சங்கராச்சாரியார் பல அறிக்கைகளை வழங்கி வருவதாலும், தொடர்ந்து செய்திகளில் இடம்பெறுவதாலும், அவர் மீது தடியடி நடத்தப்பட்டிருந்தால், அது ஒரு பெரிய செய்தியாக இருந்திருக்கும், ஆனால் தேடியபோது அத்தகைய நம்பகமான செய்தி எதுவும் கிடைக்கவில்லை.
வைரலான காணொளியின் முக்கிய பிரேம்களைத் திரும்பிப் பார்த்தபோது, சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அதே காணொளி கிடைத்தது. ஆனால் இந்த 54 வினாடிகள் கொண்ட காணொளி இந்தப் பக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2015 இல் பகிரப்பட்டது. அதாவது சங்கராச்சாரியார் மீதான தடியடி வீடியோ இப்போதையது அல்ல, ஆனால் உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அரசாங்கம் இருந்த காலத்திலிருந்தும், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த காலத்திலிருந்தும் வந்தது.
முழு விஷயம் என்ன?
முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது, 2015ம் ஆண்டு வைரலான வீடியோவுடன் தொடர்புடைய பல செய்தி அறிக்கைகள் கிடைத்தன. அறிக்கைகளின்படி, இந்த சலசலப்பு செப்டம்பர் 23, 2015 அன்று வாரணாசியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டபோது நடந்தது. உண்மையில், அவிமுக்தேஷ்வரானந்தா உட்பட பல துறவிகள் சிலையை கங்கையில் கரைக்கக் கோரி தர்ணாவில் அமர்ந்திருந்தனர், அவர்களை அகற்ற போலீசார் தடியடி நடத்தினர்.
கங்கையில் சிலைகளை கரைப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்ததால், சாந்த் சமாஜ மக்களை காவல்துறையினர் தடுத்ததாக காணொளி அறிக்கை கூறுகிறது. இந்த நேரத்தில், அவிமுக்தேஷ்வரானந்தா மீது தடியடி நடத்தப்பட்டது.
தடியடி வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில முதன்மை செயலாளர், மாவட்ட நீதிபதி மற்றும் வாரணாசி மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவின் போது, துறவிகள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு அகிலேஷ் யாதவ் அவிமுக்தேஷ்வரானந்தாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா மீதான தடியடி அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தின் போது நடந்தது என்பது தெளிவாகிறது, இதை அவரது சமீபத்திய அறிக்கைகளுடன் இணைத்து சமீபத்தியதாகக் காட்ட முயற்சிக்கப்படுகிறது.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.