Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
‘யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சங்கராச்சாரியார் மீது தடியடி’ என வைரலாகும் பதிவு உண்மையா?
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சங்கராச்சாரியார் மீது தடியடி நடத்தப்பட்டது என வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
10:24 AM Feb 12, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by ‘AajTak’
Advertisement
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் ஜோதிர்மதத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா யோகி அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, யோகி அரசாங்கத்தின் உத்தரபிரதேச காவல்துறை சங்கராச்சாரியாரை மோசமாக தாக்கியதா? சில பயனர்கள் சமூக ஊடகங்களில் அவரது வீடியோவைப் பகிர்ந்து கொண்டு இந்தக் கூற்றை முன்வைக்கின்றனர் .
வீடியோவில், சங்கராச்சாரியார் ஊடகங்களிடம், "நமது கடவுள் சாலையில் நிற்கிறார்."என பேசுவதை காணலாம். இதன் பிறகு, போலீசார் அவரை விரட்டியடித்து, தடிகளால் அடித்தனர்.
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, #அமித்ஷா ஜி, சங்கராச்சாரியார் ஜி மீது தடியடி நடத்தப்பட்டது மிகவும் வெட்கக்கேடானது, இதற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது! உடலில் ஏற்படும் ஒவ்வொரு தடியடியின் எதிரொலியும் வெகுதூரம் செல்லும், தயவுசெய்து இதை நிறுத்துங்கள்! காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! #யோகி ஜி, ராஜினாமா செய்யுங்கள், அவர்களால் UP-ஐ கையாள முடியவில்லையா? @AmitShah” என்று பதிவிட்டுள்ளனர்.. அத்தகைய ஒரு பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.