சிறிது ஆராய்ச்சி செய்த பிறகு, இது மத்தியப் பிரதேசத்தின் ஹர்தாவில் வசிக்கும் ஒரு துணை ஆய்வாளரின் இன்ஸ்டாகிராம் கணக்கின் வாட்டர்மார்க் என கண்டறியப்பட்டது. இருப்பினும், வைரலாகும் வீடியோ தற்போது அந்தக் கணக்கில் இல்லை.
வீடியோவின் சிறுபடத்தில் ஒரு நபரின் புகைப்படம் இருப்பது தெரியவந்தது. சிறப்பு என்னவென்றால், வைரல் படங்களில் அந்த நபரின் புகைப்படமும் பின்னால் உள்ள சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது. பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இது அவரது (சப் இன்ஸ்பெக்டரின்) தந்தை. இதைப் பார்த்தபோது, வைரல் வீடியோ இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஹர்தாவின் துணை ஆய்வாளரை அழைத்தபோது, வீடியோவில் காணப்படும் தம்பதியினர் அவரது சகோதரி மற்றும் மைத்துனர் என்று அவர் கூறினார். வீடியோவின் பின்னணியில் உள்ள முழு கதையையும் அவர் கூறினார். அவர், “என் சகோதரியின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவர் ஜனவரி 19, 2025 அன்று இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டேன், ஆனால் சிலர் அதை பீகாரின் ஒரு ஜோடிக்கப்பட்ட கதையுடன் வைரலாக்கிவிட்டனர். படங்களில் ஆபாசமான கருத்துகள் வெளியிடப்படுவதால் தனது முழு குடும்பமும் மன அழுத்தத்தில் இருக்கின்றனர்“ என அவர் கூறினார். அவரது நண்பர்கள் இந்த ஆபாசமான சமூக ஊடக பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களை தொடர்ந்து அவருக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும், அவர் தனது சகோதரியின் திருமணத்தின் சில படங்களையும் அனுப்பினார். அவை வைரலான படங்களுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. அத்தகைய ஒரு படத்தை கீழே காணலாம்.
தொடர்ந்து, அராரியா நகரின் நிருபர் அமரேந்திர குமார் சிங், அராரியாவில் இதுபோன்ற எந்த வழக்கும் பதிவாகவில்லை என்று உறுதிபடுத்தினார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு பெண்ணின் திருமணத்தின் படங்கள் பீகாரைச் சேர்ந்த ஒரு தவறான கதையுடன் பகிரப்படுகின்றன என இதன்மூலம் தெளிவாகிறது.
(குறிப்பு: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளரின் வேண்டுகோளின் பேரில், இந்தக் கதையில் அவரது குடும்பத்தின் அடையாளம் வெளியிடப்படவில்லை)
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.