Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
This News Fact Checked by ‘Newsmeter’
Advertisement
This News Fact Checked by ‘Newsmeter’
மகா கும்பமேளாவுக்கான சிறப்பு ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் காணொளியை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொளியில், நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது சிலர் கற்களை வீசுவதைக் காட்டுகிறது.
இந்த காணொளியின் படங்கள் , "கும்பமேளாவிற்குச் செல்லும் ரயில் மீது இஸ்லாமிய ஜிஹாதி கற்களை வீசின. ரயில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன... #Rail #UttarPradesh #MahakumbhMela2025" (கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) (காப்பகம்) என்ற தலைப்புடன் Facebook இல் பகிரப்பட்டது.
இதே போன்ற பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
இந்தக் கூற்றுக்கள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்த முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது, ஜனவரி 28, 2025 அன்று NDTV வெளியிட்ட ஒரு அறிக்கை கிடைத்தது. “மகா கும்பமேளா சிறப்பு ரயிலின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட பயணிகள் கற்களை வீசினர்'' என்ற தலைப்புடன் அந்த அறிக்கை வைரலான வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அந்த அறிக்கையில், "பலர் ஹர்பால்பூரில் ரயிலில் ஏற காத்திருந்தனர் - ஜான்சியிலிருந்து சுமார் 2 மணி நேர பயணம் - ஆனால் அவர்கள் ரயிலில் ஏற முயன்றபோது கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். கோபமடைந்த பயணிகள் வன்முறையில் ஈடுபட்டு பெட்டிகள் மீது கற்களை வீசத் தொடங்கினர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் அதே வைரல் காணொளியைப் பயன்படுத்தி, ஜனவரி 28, 2025 அன்று 'மத்தியப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற நெரிசலான ரயில் சேதப்படுத்தப்பட்டது' என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில், "பிளாட்பாரத்தில் 7,000-8,000 பேர் இருந்தனர். வந்த ரயில் ஏற்கனவே கூட்டமாக இருந்தது. சில பயணிகள் கற்களை வீசத் தொடங்கினர். நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினோம். கும்பல் கலைந்து சென்றது. நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் ஒரு மணி நேரம் ஆனது. அதன் பிறகு ரயில் பாதுகாப்பாக புறப்பட்டது" என்று ஹர்பால்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் புஷ்பக் சர்மா கூறினார்.
ஹர்பால்பூர் ரயில் நிலையத்தில் மகா கும்ப சிறப்பு ரயிலின் கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் கற்களை வீசி தாக்கியதாக பல செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
எனவே, வைரலாகும் வீடியோவில் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில் மீது வகுப்புவாத தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. கற்களை வீசிய மக்கள் ரயிலுக்காகக் காத்திருந்த விரக்தியடைந்த பயணிகள், அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோது கோபமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் எந்த வகுப்புவாத கோணமும் இல்லை.