For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

த்ரில்லர் பாணியில் உருவாகிறதா #Suriya45? - வெளியான தகவல்!

08:20 AM Oct 20, 2024 IST | Web Editor
த்ரில்லர் பாணியில் உருவாகிறதா  suriya45    வெளியான தகவல்
Advertisement

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில்சூர்யா நடிக்கும் சூர்யா 45 திரைப்படம் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா? இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா? என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இதனை சமீபத்தில் உறுதிசெய்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடித்து கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ‘சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சூர்யா 45 திரைப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement