Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவிற்குள் 300 தீவிரவாதிகள் ஊடுருவுவதாக நட்டா கூறிய கருத்து உண்மையா?

01:41 PM May 08, 2024 IST | Web Editor
Advertisement

This news is fact Checked by Newsmeter

Advertisement

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியதாக வைரலாகி வரும் செய்தி மிகவும் பழையது என Fact Check முடிவில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில், பாஜக தலைவர் ஜேபி நட்டா தொடர்பாக இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியானதாக அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியின் தலைப்பில், 300 பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிபெறச் செய்யுமாறு ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைச் சோதனையில் என்ன தெரியவந்தது? 

இந்த வைரலான கூற்றை ஆராய்ந்து, அது தவறாக வழிநடத்துவதாகவும், இந்த செய்தி வெளியாகியுள்ள செய்தித்தாள் நான்கு ஆண்டுகள் பழமையானது என்றும், இது டைனிக் பாஸ்கர் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது என்றும் இந்த வீடியோ குறித்து உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவான Newsmeter வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்த கூற்றை ஆராய்ந்ததில், 21 அக்டோபர் 2020 அன்று டைனிக் பாஸ்கர் செய்தித்தாளில் வெளியான செய்தியின்படி, நட்டா பீகாரின் பக்சரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து, 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக நட்டா கூறியுள்ளார்.

இந்த செய்தியை தேடியபோது, ​​4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தித்தாளின் தலைப்புச் செய்தி என கூறி, இதனுடன் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக வைரலாகி வரும் புகைப்படம் பொய்யானது என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

This story was originally published by ‘NewsMeter‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective Newsmeter and translated by News7Tamil 

Tags :
BJPElections With News7TamilElections2024Fact CheckJP NaddaLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesterrorists
Advertisement
Next Article