ஐபிஎல் கோப்பை கனவு - கோயில் குளங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர் ரசிகர்கள்!
இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிகமான ரசிகர்களை கொண்ட அணிகளுள் ஒன்று பெங்களூர். இந்த அணி முதல் சீசனில் இருந்து கிரிஸ் கெய்ல், விராட் கோலி, ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் இருந்தும் தொடர்ந்து 17 ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றாத அதிர்ஷ்டம் இல்லாத அணியாக பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை பெங்களூர் அணி 2009, 2011, 2016 ஆகிய மூன்று ஆண்டுகள் இறுதி போட்டிக்கு முன்னேறியும் தோல்வியடைந்தது.
இந்த தோல்விகளில் இருந்து மீண்டு கோப்பையை வெல்ல இந்த வருடம் பெங்களூர் அணி 19 புள்ளிகள் பெற்று முதல் தகுதிச்சுற்றில் வெற்றி கண்டு நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதே போல் முதல் தகுதிச் சுற்றில் தோற்ற பஞ்சாப் அணி இரண்டாவது தகுதி சுற்றியில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரு அணிகளும் தங்களது முதல் கோப்பை கனவில் இன்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் பல வருட கனவு நிறைவேற, அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ந்து கோயில்களில் வழிபட்டும் புனித நீராடியும் வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.