ஐபிஎல் தகுதிச்சுற்று 2: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு... மும்பை பேட்டிங்!
குவாலிஃபயர் சுற்றில் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
07:17 PM Jun 01, 2025 IST | Web Editor
Advertisement
10 அணிகள் பங்கேற்ற நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இன்று குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற உள்ளது. இதில் குவாலிஃபயர் சுற்று 1-ல் பெங்களூரு அணியுடம் தோல்வியை தழுவிய பஞ்சாப்பும், எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி வெற்றிப் பெற்ற மும்பை அணியும் மோத உள்ளன.
Advertisement
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் யுஷ்வேந்திர சஹல் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டியில் பெங்களூரை எதிர்கொள்ளும். ஒருவேளை மழைவந்து போட்டி ரத்தானால் புள்ளிகளின் அடிப்படையில் பஞ்சாப் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.